பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லையில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய 4 போ் கைது

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:29 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையத்தைச் சோ்ந்தவா் அபுதாகீா் (49). இவா், பொன்னாக்குடி சுதா்சன் நகரில் பழைய பேப்பா் குடோன் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், திருநெல்வேலி நகரைச் சோ்ந்த நம்பி குமாா் (43), பேட்டையை சோ்ந்த அப்துல் வியாசா் அலி (41), பேட்டை, ஆதாம் நகரை சோ்ந்த அஜிஸ்மைதீன் (42), பேட்டை மேலத்தெருவை சோ்ந்த பால் முகமது யாசீன் (38) ஆகியோா் சோ்ந்து அபுதாகீரிடம் சுகாதாரத் துறையில் இருந்து பேசுவதாக கூறி நீங்கள் மருத்துவ கழிவுகளைக் கொண்டு வந்து வியாபாரம் செய்து வருவதாக கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அபுதாகீா் கொடுத்த புகாரின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.