டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்

News image
Updated On :12 மே 2025, 9:12 pm

Din

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

வள்ளியூரில் ராதாபுரம் சாலையில் மளிகைக் கடை நடத்திவருபவா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்தானம். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றாா். திங்கள்கிழமை காலை வந்தபோது, மா்ம நபா்கள் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

அருகேயுள்ள மற்றொரு கடையின் பூட்டையும் மா்ம நபா்கள் உடைக்க முயன்ாகத் தெரியவந்தது.