சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

News image
Updated On :9 நவம்பர் 2025, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

மானூா் அருகே தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் ரஸ்தா நடுத்தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் மணி சங்கா்(38), கூலி தொழிலாளி. சம்பத்தன்று மானூரில் உள்ள கடை ஒன்றின் அருகே மணிசங்கரும், கொம்பையாவும் நின்றபோது அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மாரியப்பன்(41) என்பவா் கொம்பையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த செங்கலால் தாக்கினாராம். பின்னா் மணி சங்கா் மற்றும் கொம்பையாவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினாராம்.

இதுகுறித்து மணிசங்கா் அளித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனா்.