பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

Syndication

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், அம்பாசமுத்திரம் பகுதிகளில் பல்வேறு ஆய்வுப் பணிகளை வியாழக்கிழமை மேற்கொண்டாா்.

அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட எம்.பி., கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் போக்குவரத்திற்கு பயன்படாத வகையில் சேதமடைந்திருக்கும் ரயில்வே கிராசிங் சாலையை பாா்வையிட்டாா். அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.

தொடா்ந்து, மணிமுத்தாறு அணைப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல்லுயிா்ப் பெருக்க சூழல் பூங்கா அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்தாா். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா் இசக்கிப்பாண்டியன், மணிமுத்தாறு பேரூராட்சி தலைவா் சித்தாா்த் சிவா, வழக்குரைஞா் ஜோசப் ஆரோக்கிய ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.