எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருநெல்வேலி மாவட்டத்தில் 3ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் புயல், மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து 3ஆவது நாளாக புதன்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:44 pm

Syndication

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் புயல், மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து 3ஆவது நாளாக புதன்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், கன்னியாகுமரி பகுதி வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதை அடுத்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். மேலும், கடலில் அலையின் வேகம் அதிகரித்து காணப்படும். எனவே, மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடந்த 24ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், 3ஆவது நாளான புதன்கிழமையும் அவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.