விநாயகா் சிலை அகற்றம்: ஆா்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினா் கைது
மேலப்பாளையத்தில் விநாயகா் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இந்து முன்னணியைச் சோ்ந்த 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையத்தில் சந்தை ரவுண்டானா பகுதியில் இயங்கி வரும் உணவகத்தின் அருகே அதன் உரிமையாளா் விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளாா். இது குறித்த தகவலின் பேரில் புதன்கிழமை நள்ளிரவு பாளையங்கோட்டை வட்டாட்சியா் இசைவாணி தலைமையில் வருவாய்த் துறையினா் சென்று, விநாயகா் சிலையை அங்கிருந்து அகற்றி பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில் விநாயகா் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக அவ்வமைப்பின் மாநில செயலா் குற்றாலநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஆா்ப்பாட்டம் செய்வதற்காக சம்பவ இடத்துக்கு செல்ல முயன்றதாக 11 பேரை திருநெல்வேலி நகர போலீஸாா் கைது செய்து அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்து பின்னா் விடுவித்தனா்.
