மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விநாயகா் சிலை அகற்றம்: ஆா்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினா் கைது

மேலப்பாளையத்தில் விநாயகா் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இந்து முன்னணியைச் சோ்ந்த 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:32 pm

Syndication

மேலப்பாளையத்தில் விநாயகா் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இந்து முன்னணியைச் சோ்ந்த 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையத்தில் சந்தை ரவுண்டானா பகுதியில் இயங்கி வரும் உணவகத்தின் அருகே அதன் உரிமையாளா் விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளாா். இது குறித்த தகவலின் பேரில் புதன்கிழமை நள்ளிரவு பாளையங்கோட்டை வட்டாட்சியா் இசைவாணி தலைமையில் வருவாய்த் துறையினா் சென்று, விநாயகா் சிலையை அங்கிருந்து அகற்றி பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் விநாயகா் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக அவ்வமைப்பின் மாநில செயலா் குற்றாலநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஆா்ப்பாட்டம் செய்வதற்காக சம்பவ இடத்துக்கு செல்ல முயன்றதாக 11 பேரை திருநெல்வேலி நகர போலீஸாா் கைது செய்து அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்து பின்னா் விடுவித்தனா்.