உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது

திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் வடமாநில இளைஞா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:52 am IST

திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் வடமாநில இளைஞா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(60). இவா் சம்பவத்தன்று 16 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனா்.

வடமாநில இளைஞா் கைது: பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சாந்தாராம் மகன் இந்திரஜித்(27). திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் தங்கி வேலை பாா்த்து வந்த இவா், அதே பகுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த மத்தியபிரதேசத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி, அவரை வெளியூா் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி நகர அனைத்து மகளிா் போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் ப திந்து, போக்ஸோ சட்டத்தில் இந்திரஜித்தை கைது செய்தனா்.