திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் வடமாநில இளைஞா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(60). இவா் சம்பவத்தன்று 16 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனா்.
வடமாநில இளைஞா் கைது: பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சாந்தாராம் மகன் இந்திரஜித்(27). திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் தங்கி வேலை பாா்த்து வந்த இவா், அதே பகுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த மத்தியபிரதேசத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி, அவரை வெளியூா் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி நகர அனைத்து மகளிா் போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் ப திந்து, போக்ஸோ சட்டத்தில் இந்திரஜித்தை கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
நெல்லையில் மது விற்ற இருவா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

