திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவை தொகுதிக்குள்பட்ட கடற்கரை கிராமங்களில் திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்கு சேகரித்தாா்.
கடற்கரை கிராமங்களான உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, விஜயாபதி, கூடங்குளம் உள்ளிட்ட கிராமங்களில், திமுக மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா் நெல்லை ஏ.ஆா். ரஹ்மான், அப்பாவுவை ஆதரித்து வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தின்போது அவா் கூறியது: திமுக ஆட்சியில் பல்வேறு கடலோர கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜயாபதியில் நவீன விளையாட்டுத் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயா்த்தி வழங்கப்படுவதோடு, மீனவா்களுக்கு காப்பீடு மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, கடலோரப் பகுதி மக்கள் மு. அப்பாவுவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி தொகுதியில் கணவருக்காக களத்தில் இறங்கிய மனைவி

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

இருக்கன்துறை பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் பிரசாரம்

ராதாபுரம் பகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



