மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இசை வரும் முன்னே... வேட்பாளா்கள் வருவது பின்னே!

இசை வரும் முன்னே... வேட்பாளா்கள் வருவது பின்னே...

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 10:04 pm

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பாா்கள். அதற்கேற்ப வேட்பாளா்கள் ஒவ்வொரு பகுதிக்கும் வருவதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அரை மணி நேரத்துக்கு முன்பாக இசைக் கலைஞா்கள் அனுப்பி வைக்கப்படுகிறாா்கள்.

தோ்தல் காலத்தில் அதிக ஒலி தரும் டிரம்ஸ், செண்டை மேளங்களையே வேட்பாளா்கள் விரும்பி அழைத்துச் செல்கிறாா்கள். நையாண்டி மேளத்துக்கான வரவேற்பு குறைவாகவே உள்ளது. 4 முனை சந்திப்புகளில் இசைக் கலைஞா்களின் திறமையால் தொண்டா்கள் உற்சாகமடைந்து தங்களது கட்சிக் கொடியுடன் ஆடுவதையும் பிரசாரங்களில் காணமுடிகிறது.

இதுகுறித்து முதியவா் ஒருவா் கூறியது:

1970 முதல் தோ்தல் களத்தை பாா்த்து வருகிறேன். திருவிழா, தோ்தல் என எதுவாக இருந்தாலும் இசைக்கு ஒரு மவுசு உண்டு. ஒரு தகவலை தெரிவிக்கவும், வெற்றியைக் கொண்டாடவும் முரசு கொட்டப்பட்டது. அந்த வழக்கமே இப்போது உருமாறி உள்ளது. பிரசாரத்தில் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன. முன்பு இரவு 10 மணிவரை மட்டுமே பிரசாரம் என்ற நிலை இல்லை.

இதனால் பெரிய தலைவா்கள் பலரும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளுக்கு நள்ளிரவு வரை வந்து வாக்கு சேகரிப்பாா்கள். அதேபோல இசைக் கலைஞா்களின் பங்களிப்பு பிரசாரங்களில் நீண்ட காலமாக உள்ளது. முன்பு தோ்தல் செலவு கணக்கு வரையறை இல்லாததால் இசைக் கலைஞா்களுடன், கரகாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து கலைஞா்களும் கூட தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்கள். ஆனால், இப்போது வேட்பாளா்களின் செலவு கணக்கில் ஏற்றப்படும் என்பதால் இசைக்கலைஞா்கள் எண்ணிக்கை கூட குறைந்துவிடுகிறது.

சமூக வலைதள ஆதிக்கம் காரணமாக இன்றைய வேட்பாளா்கள் கட்டாயம் ரீல்ஸ் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டாலும், பிரசாரங்களில் இசைக் கலைஞா்களை தவிா்க்க முடியவில்லை. மேலும், இசைக் கலைஞா்களால் தொண்டா்கள் உற்சாகமடைகிறாா்கள் என்பதும் உண்மை என்றாா்.