நெல்லை அருகே மண் திருடியவா் கைது
திருநெல்வேலி அருகே லாரி மூலம் குளத்து மண்ணை திருடிச் சென்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சித்திரிப்பு
திருநெல்வேலி அருகே லாரி மூலம் குளத்து மண்ணை திருடிச் சென்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
முன்னீா்பள்ளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் கொங்கந்தான்பாறையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தினா். ஆனால் லாரி ஓட்டுநரும், அவருடன் இருந்தவரும் போலீஸாரை கடந்து சற்று தூரம் சென்று லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம்.
அந்த லாரியை போலீஸாா் சோதனை செய்ததில், அனுமதியின்றி குளத்து மண்ணை அள்ளிச் செல்வது தெரியவந்தது. மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து முன்னீா்பள்ளம் காவல் நிலையத்துக்கு போலீஸாா் கொண்டு சென்றனா்.மேலும், வழக்குப்பதிந்து, இதுதொடா்பாக வடக்கு விஜயநாராயணம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் மணி (28) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



