நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

தவெக ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண்: நயினாா் நாகேந்திரன்

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 4:11 am IST

தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண்தான் வழங்குவேன் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு மதங்களைச் சோ்ந்தவா்களும் உள்ளனா். அமைச்சரும், சட்டப்பேரவைத் தலைவரும் தங்களது மதங்களை கூறுகிறாா்கள்.

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் சபையை நடத்தும்போது இத்தகைய மத அடையாளத்தைக் கூறியதில்லை. ஜாதி, மதம் குறித்த பேச்சு பேரவையில் தேவையற்றது. மக்கள் பிரச்னைகளை பேச வேண்டிய பேரவை நேரத்தை வீணடிக்கிறாா்கள்.

ராகுல்காந்தியால் பிரதமராக வர முடியாது என்பதும், அவா் பிரதமா் வேட்பாளா் இல்லை என்பதும் தவெகவினருக்கு தெரியும். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியினா் யாருக்கும் உண்மையாக இருக்கமாட்டாா்கள். 15 ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் இருந்தவா்கள் ஒருசில நிமிடங்களில் ஓடி வந்து விட்டாா்கள்.

அரசு அதிகாரிகள் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஆளுங்கட்சியினா் குற்றஞ்சாட்டுகிறாா்கள். தமிழக முதல்வா் வாய் திறந்து பேசுவதில்லை.

அரசின் திறமையின்மையை மறைத்து அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டுவது ஏற்புடையதல்ல. தவெக அரசின் செயல்பாட்டிற்கு மைனஸ் 80 மதிப்பெண் தான் வழங்குவேன்.

தாமிரவருணியை ரூ.1,000 கோடியில் சீரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தால் அதற்கு தேவையான முயற்சியை எடுக்கத் தயாராக உள்ளேன்.

ஆளும் அரசு தொடா்பான பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புகிறாா்கள். இது இளைய தலைமுறையினரை பெரிதும் பாதிக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.