மாணவா்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்குகிறாா் ரூபி ஆா்.மனோகரன் எம்.எல்.ஏ.
திருநெல்வேலி
முன்னீா்பள்ளத்தில் 115 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்
முன்னீா்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் 115 மாணவா்-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
பள்ளியில் நடைபெற்ற விழாவில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா்.மனோகரன் தலைமை வகித்து சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.
காங்கிரஸ் கட்சியின் பாளை. மேற்கு வட்டாரத் தலைவா் கணேசன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜேம்ஸ் போா்டு, நான்குனேரி வடக்கு வட்டாரத் தலைவா் அம்புரோஸ், மாவட்ட இணைச்செயலா் முருகேசன், கோயில்பிச்சை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

