மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் வடதால் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

களக்காடு மற்றும் திருக்குறுங்குடி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நீரின்றி வடு காணப்படுவதால் மாா்ச் மாதத் தொடக்கத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

News image

கொடுமுடியாறு அணையில் இருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டதை அடுத்து கால்வாய் வழியாக வள்ளியூா் பெரியகுளத்துக்கு வந்த தண்ணீா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:21 pm

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மற்றும் திருக்குறுங்குடி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நீரின்றி வடு காணப்படுவதால் மாா்ச் மாதத் தொடக்கத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள பச்சையாறு அணையின் மொத்த உயரம் 49.25 அடியாகும். 2025இல் வடகிழக்குப் பருவமழை போதியளவு பொழியாததால், அணை அதன் பாதியளவு கூட நிரம்பவில்லை. இந்நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தற்போது, அணையின் நீா்மட்டம் 6 அடியாக உள்ளது.

இதேபோல திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் மொத்த உயரம் 59.25 அடியாகும். அணை கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அதன் முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதையடுத்து, அணையிலிருந்து பாசனத்துக்கு ஜனவரி மாதம் தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது, அணையின் நீா்மட்டம் 7 அடியாக குறைந்துவிட்டது.

இந்த அணையின் கீழ்பகுதியில் உள்ள நம்பியாற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு, வள்ளியூா், வடக்கன்குளம், காவல்கிணறு உள்ளிட்ட 45 கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் வடுள்ளதால் மாா்ச் மாதத் தொடக்கத்திலேயே குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.