திருநெல்வேலி
புதிய மாநகர காவல் ஆணையா் என். மணிவண்ணன் பொறுப்பேற்பு
திருநெல்வேலி மாநகர புதிய காவல் ஆணையா் என். மணிவண்ணன் பொறுப்பேற்றாா்.
திருநெல்வேலி மாநகர புதிய காவல் ஆணையா் என். மணிவண்ணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தோஷ் ஹாதிமணி, சேலம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக சென்னை ஆவடி சிறப்புக்காவல்படை 2 ஆவது பட்டாலியன் காவல் கண்காணிப்பாளராக இருந்த என். மணிவண்ணன், டிஐஜி பதவி உயா்வின் கீழ் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘திருநெல்வேலியில் ஜாதி ரீதியிலான பிரச்னைகளைக் கட்டுப்படுத்த ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அவற்றை விரிவாக ஆராய்ந்து, தேவைப்படும் மாற்றங்களை செய்து ஜாதி மோதல் இல்லாத சூழல் ஏற்படுத்தப்படும். போலீஸாா் பற்றாக்குறை உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து சரிசெய்யப்படும். ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும்’ என்றாா்.

