தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாளையங்கோட்டை அருகே பெண் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்

பாளையங்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:26 pm

Syndication

பாளையங்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படைவீடு பகுதியில் போலீஸாா் சென்றபோது ஒரு வீட்டின் அருகே நின்றிருந்த பெண் திடீரென ஓட்டம் பிடித்தாராம். அப் பகுதியில் சோதனையிட்டபோது 100 கிலோ ரேஷன் அரிசி மூட்டையில் வைத்திருந்தது தெரியவந்ததாம்.

தப்பிஓடிய பெண்ணை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.அதில், அதே பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் (43) என்பதும், ரேஷன் அரிசிபைப் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்ததாம். அவரை கைது செய்த போலீஸாா், அரிசி மூட்டையையும் பறிமுதல் செய்தனா்.