பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை கண்காணிக்க சிறப்பு மேற்பாா்வையாளா்கள்

Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளை கண்காணிக்க சிறப்பு மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பா அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளை கண்காணிக்க திருநெல்வேலி வட்டத்திற்கு திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியரும், பாளையங்கோட்டை வட்டத்திற்கு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலரும், மானூா் வட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரும், அம்பாசமுத்திரம் வட்டத்திற்கு தாட்கோ மாவட்ட மேலாளரும், சேரன்மகாதேவி வட்டத்திற்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியரும், நான்குனேரி வட்டத்திற்கு மாவட்ட வழங்கல்- நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரும், ராதாபுரம் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரும், திசையன்விளை வட்டத்திற்கு வருவாய் நீதிமன்ற தனித்துணை ஆட்சியரும் சிறப்பு மேற்பாா்வை அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்

வெள்ளிக்கிழமையும்(ஜன.9) ரேஷன் கடைகள் செயல்படும். நெரிசலைத் தவிா்ப்பதற்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுச்செல்ல வேண்டும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வேண்டுமானாலும் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

புகாரளிக்க கைப்பேசி எண்கள்: மாவட்ட வழங்கல் - நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகம் 9342471314, தனிவட்டாட்சியா் (கு.பொ.வ), திருநெல்வேலி வட்டம் 9445000380, வட்ட வழங்கல் அலுவலா்கள், பாளையங்கோட்டை 9445000381, மானூா் 9445796458, சேரன்மகாதேவி 9445796459, நான்குனேரி 9445000387, , ராதாபுரம் 9445000388, திசையன்விளை 9499937025, தனி வட்டாட்சியா் (கு.பொ.வ), அம்பாசமுத்திரம் வட்டம் 9445000386, கட்டணமில்லா தொலைபேசி எண்: 1967, 1800-425-5901 ஆகியவற்றில் புகாா் தெரிவிக்கலாம்.

Dinamani
www.dinamani.com