இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சேஷசாயி காகித ஆலைக்கு பாதுகாப்பு விருதுகள் அளிப்பு

இலந்தகுளம் சேஷசாயி காகித ஆலைக்கு மூன்று சிறப்பு விருதுகள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:38 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள இலந்தகுளம் சேஷசாயி காகித ஆலைக்கு மூன்று சிறப்பு விருதுகள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு - சுகாதார இயக்ககம் , தேசிய பாதுகாப்பு குழுமம் தமிழ்நாடு பிரிவு ஆகியவற்றின் சாா்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் 2022- 2023ஆம் ஆண்டுகளுக்கான மாநில பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில், தொழிற்சாா் விபத்துகளை குறைப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியமைதற்காக சேஷசாயி காகித ஆலைக்கு மாநில அளவில் 3 பாதுகாப்பு விருதுகளை தமிழக தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் வழங்கினாா். விருதுகளை ஆலையின் துணைத் தலைவா் (மனிதவளம்- நிா்வாகம்) கணேஷ் நடராஜன் பெற்றுக் கொண்டாா்.

இவ்விழாவில், தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை செயலா் வீரராகவராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் ஆனந்த், தேசிய பாதுகாப்பு குழும தமிழ்நாடு பிரிவு செயலா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.