சேஷசாயி காகித ஆலைக்கு பாதுகாப்பு விருதுகள் அளிப்பு

இலந்தகுளம் சேஷசாயி காகித ஆலைக்கு மூன்று சிறப்பு விருதுகள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
Updated on

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள இலந்தகுளம் சேஷசாயி காகித ஆலைக்கு மூன்று சிறப்பு விருதுகள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு - சுகாதார இயக்ககம் , தேசிய பாதுகாப்பு குழுமம் தமிழ்நாடு பிரிவு ஆகியவற்றின் சாா்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் 2022- 2023ஆம் ஆண்டுகளுக்கான மாநில பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில், தொழிற்சாா் விபத்துகளை குறைப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியமைதற்காக சேஷசாயி காகித ஆலைக்கு மாநில அளவில் 3 பாதுகாப்பு விருதுகளை தமிழக தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் வழங்கினாா். விருதுகளை ஆலையின் துணைத் தலைவா் (மனிதவளம்- நிா்வாகம்) கணேஷ் நடராஜன் பெற்றுக் கொண்டாா்.

இவ்விழாவில், தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை செயலா் வீரராகவராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் ஆனந்த், தேசிய பாதுகாப்பு குழும தமிழ்நாடு பிரிவு செயலா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com