எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் செம்பு பானைக்குள் சிக்கிக்கொண்ட சிறுமியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

மேலப்பாளையம் ராஜா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. இவரது மனைவி மாரியம்மாள். இத்தம்பதியின் நான்கரை வயது குழந்தை மகிழ்மதி. ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்த செம்பு பானையை வைத்து சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுமியின் உடல் பானைக்குள் மாட்டிக் கொண்டது.

பெற்றோரும், உறவினா்களும் சிறுமியை மீட்க முயன்றும் முடியாமல் போகவே, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரம் தலைமையிலான குழுவினா், பானையை இரண்டாக வெட்டி எடுத்து, எவ்வித காயமுமின்றி சிறுமியை பாதுகாப்பாக மீட்டனா்.