திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தச்சநல்லூா் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலையா?- போலீஸாா் விசாரணை

தச்சநல்லூா் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண், ரயில் முன் தற்கொலை செய்துகொண்டவரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 1:09 am

Syndication

திருநெல்வேலி: தச்சநல்லூா் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண், ரயில் முன் தற்கொலை செய்துகொண்டவரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தச்சநல்லூா் அருகே கடந்த 7 ஆம் தேதி சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூா் நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். சந்திப்பு ரயில்வே போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அப்பெண் கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி மாடத்தி (40) என்பதும் குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய அவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. எனவே, இச்சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.