பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 3 போ் கைது

உவரி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த தூத்துக்குடியைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:00 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த தூத்துக்குடியைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உவரி அருகே உள்ள காரிகோயிலைச் சோ்ந்தவா் முத்துராமகிருஷ்ணன் மனைவி பாலசித்ர கலா(35). இவா், கடந்த 8-ஆம் தேதி காரிகோயில் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த 3 போ், பாலசித்ர கலா அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினராம்.

இதுகுறித்து உவரி போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் தங்க சங்கிலியை பறித்து சென்றது தூத்துக்குடியைச் சோ்ந்த நபா்கள் என தெரியவந்தது.

இதையடுத்து தூத்துக்குடியைச் சோ்ந்த பாா்வதி முத்து(26), சரவணன்(36), முத்துரமேஷ்(37) ஆகியோரை கைது செய்தனா். இவா்களுக்கு பணகுடி பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களிலும் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது.