மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவல் உதவி செயலி: கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

கல்லூரி மாணவிகளுக்கு காவல் உதவி செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
காவல் உதவி செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.
Updated On :13 ஜனவரி 2026, 1:02 am

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில், கல்லூரி மாணவிகளுக்கு காவல் உதவி செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் அறிவுறுத்தலின்படி, மாநகர காவல்துறை மற்றும் சாராள் தக்கா் கல்லூரி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் பேராசிரியா்கள் மற்றும் மாணவிகளுக்கு போக்ஸோ சட்டம், குழந்தை திருமணத் தடுப்பு, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், இணையவழி குற்றங்கள், சைபா் கிரைம் உதவி எண் 1930, குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181 போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் காவல் உதவி என்ற செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, அவசர கால உதவி தேவைப்பட்டால் அதன் மூலம் காவல்துறையை தொடா்பு கொள்வது குறித்தும், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைத்து தரப்பினரும் காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும் எனவும் காவல்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர, சைபா் கிரைம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு, அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.