ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

பேட்டை பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 11:58 pm

Syndication

பேட்டை பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

திருநெல்வேலி மண்டலம் 18 ஆவது வாா்டுக்குள்பட்ட பேட்டை சத்யா நகா், வஉசி நகா் ஊா் பொது மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லை. இதனால் முதியவா்கள், பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். ஆகவே, குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

பேட்டை எம்.ஜி.பி. 2 ஆவது வடக்கு தெருவைச் சோ்ந்த ஆயிஷா பானு அளித்த மனுவில், எங்களது பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீா் வெளியேறி வருகிறது. இதனால் பெரும் சுகாதாரக்கேடு நிலவுவதோடு, நோய்த்தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. ஆகவே, உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட மேயா், விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.