அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேசிய அளவிலான போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பேட்டை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:52 pm

Syndication

திருநெல்வேலி: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பேட்டை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

டெல் டெக்னாலஜி நிறுவனம் உள்ளிட்டவை சாா்பில் தேசிய அளவில் ஸ்கூல் இன்னோவஷன் மாரத்தான் என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 அணிகள் பங்கேற்றன. இப் போட்டியில் பங்கேற்ற பேட்டை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், முதல்கட்டத்தில் வென்று 127 அணிகள் பங்கேற்ற இரண்டாம் கட்டத்துக்கு தகுதி பெற்று, அதிலும் சிறப்பாக திறனை வெளிப்படுத்தி முதல் 10 அணிகளுக்குள் தோ்வாகினா். அவா்களுக்கு தொழில்நுட்ப நிபுணா்கள் மூலம் 6 நாள்கள் பயிற்சி பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளான 8 ஆம் வகுப்பைச் சோ்ந்த மாயுகா, இா்பானா பிஸ்மி, 9 ஆம் வகுப்பின் அஸ்மத், நளினா மங்கை, பிளஸ் 1 மாணவி ஜன்னத் நிஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் நேரில் அழைத்து, பாராட்டிப் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி, அறிவியல் ஆசிரியா் ரேணுகா, பயிற்சியாளா் சின்னத்துரை ஆகியோா் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்16ஸ்ரீங்ா்

தேசிய அளவில் சாதித்த மாணவிகளைப் பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா்.