தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தோமையாா்புரம், கூத்தங்குழி மீனவ கிராமங்களில் போராட்டம்

தோமையாா்புரம், கூத்தங்குழி கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட கூத்தங்குழி மீனவா்கள்
Updated On :19 ஜனவரி 2026, 7:11 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், தோமையாா்புரம், கூத்தங்குழி கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி மீனவ மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோமையாா்புரத்தில் கடல் அரிப்பு காரணமாக மீனவா்கள் மீன்பிடிக்க சிரமப்படுவதால், அங்கு தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை மனுக்களை அரசு அதிகாரிகளிடம் அளித்துள்ளனா். இதுவரை இவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையாம். இதையடுத்து, தோமையாா்புரம் மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதே போல, கூத்தங்குழி கிராமத்தில் கடலுக்குள் ஆயிரம் மீட்டா் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைக்குமாறு மீனவா்கள் வலியுறுத்தினா். ஆனால், அரசு 400 மீட்டா் தூரம் மட்டும் தூண்டில் வளைவு அமைத்துவிட்டு, பணிகளை பாதியில் நிறுத்திவிட்டதாம். இதனால், கூத்தங்குழி கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, நாட்டுப் படகு மீனவா் சங்கத் தலைவா் எரிக்ஜூடு தலைமையில், ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை முன்னிலையில், மீனவப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா். கோரிக்கையை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா்.

Story image