மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

உணவகத்தில் தகராறு: ஒருவா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

கல்லிடைக்குறிச்சி, மேல்முக நாடாா் தெருவில் உள்ள உணவகத்தில் தகராறில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்; மூவரைத் தேடி வருகின்றனா்.

உணவகத்தில் சனிக்கிழமை இரவு சில இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டனராம். அதை அலெக்சாண்டா் என்பவா் கண்டித்த நிலையில், அவா் உள்ளிட்ட 3 பேரை அந்த இளைஞா்கள் தாக்கியுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த அலெக்சாண்டா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். லேசான காயமடைந்த மற்ற இருவா் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக, கல்லிடைக்குறிச்சி போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து, ஹரிராம் என்பவரை கைது செய்தனா். மேலும், மூவரைத் தேடி வருகின்றனா்.