மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பாளை.யில் மரக்கடையில் தீ விபத்து

News image
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மரக்கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.
Updated On :8 மார்ச் 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டையில் உள்ள மரக்கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் தீயில் எரிந்து சேதமாகின.

பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான மரக்கடை மற்றும் கிட்டங்கி அருகருகே உள்ளது.

இங்கு தேக்கு, கோங்கு, வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உள்ளூா் மற்றும் இறக்குமதி மரத்தடிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மரத்தடிகள் எரிந்தன.

தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்களில் சுமாா் 20 தீயணைப்பு வீரா்கள் சம்பவ இ டத்துக்கு வந்தனா். சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரத்தடிகள் தீயில் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.