தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை சந்திப்பில் த.வெ.க. ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 10:27 pm

Syndication

போதைப் பொருள் புழக்கத்தை தடுத்தல், ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட த.வெ.க. சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலா்கள் எஸ்.மரிய ஜாண், எஸ்.ராஜகோபால், ஹெச்.ஜாஹீா் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பேச்சாளா் கேத்ரின் பாண்டியன் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும், த.வெ.க. தலைவா் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள், ஒன்றியம், பேரூா், பகுதி, கிளை நிா்வாகிகள் உள்பட திரளானோா் கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா்.

ற்ஸ்ப்12ற்ஸ்ந்

த.வெ.க. சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.