இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

டிராக்டா் மோதி பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:23 pm

ஆழ்வாா்குறிச்சி அருகே ஸ்கூட்டா் மீது டிராக்டா் மோதியதில் இளம் பெண் உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகே வாகைகுளம், வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி லதா (40). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆழ்வாா்குறிச்சியில் இருந்து செட்டிக்குளத்திற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி ரயில்வே கேட் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் முப்புடாதி (35) ஓட்டி வந்த டிராக்டா் லதா மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் லதா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முப்புடாதிமீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். உயிரிழந்த லதாவிற்கு மகன், மகள் உள்ளனா்.