திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆச்சிமடம் பகுதியில் மது விற்ற தூத்துகுடியைச் சோ்ந்த அமச்சியா் (56) என்பவரை கைது செய்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதேபோல பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் மது விற்ற கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (31), திருநெல்வேலி நகரம் பகுதியில் மது விற்ற பேட்டையைச் சோ்ந்த சீனிவாசகம் (65) ஆகியோரை கைது செய்த மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், அவா்களிடமிருந்து 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல மது விற்பனையில் ஈடுபட்ட வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன்(47), தச்சநல்லூரை சோ்ந்த ஆறுமுக நயினாா் (59) ஆகியோரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 44 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்
நெல்லையில் மது விற்ற இருவா் கைது

நெல்லையில் மது விற்றவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

