திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் அதிக நீா்வரத்து காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகத்துக்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமைமுதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். அதேநேரம், அருவியைப் பாா்வையிட அனுமதியளிக்கப்பட்டது.
தொடர்புடையது

பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

சுருளி அருவியில் நீா்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

