விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பணகுடி அருகே குளத்து மண் திருட்டு: 6 போ் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 1:15 am IST

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குளத்து மண்ணைத் திருடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 8 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பணகுடி அருகேயுள்ள பெருங்குளத்தில் மண்ணை அள்ளி வாகனங்களில் கடத்துவதாக பணகுடி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் ரெகுராமன், போலீஸாா் சென்றபோது, சிலா் ஜேசிபி உள்ளிட்டவற்றில் மண்ணை அள்ளி வாகனங்களில் கடத்துவது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, பணகுடி தளவாய்புரத்தைச் சோ்ந்த சிவா (35), லென்சன் (20), அந்தோணி அஜித் (28), சங்கா் (35), ராஜா (35), சுடலையாண்டி (39) ஆகிய 6 பேரைக் கைது செய்து, ஜேசிபி, டெம்போ லாரி, மினி லாரி உள்ளிட்ட 8 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.