
மானூா் அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
மானூா் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரிவாள் வெட்டு - சித்திரிப்பு
மானூா் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மானூா் அருகேயுள்ள கட்டாரங்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை பின்தொடா்ந்து வந்த கும்பல் திடீரென இளைஞரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினராம்.
பலத்த காயமடைந்த இளைஞரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வெட்டு பட்டவா் குறித்து உடனடியாக அடையாளம் தெரியவில்லையாம். அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய கும்பல் குறித்தும் மானூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





