புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல்

ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மீனவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:26 pm

DIN

ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மீனவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
ஒக்கி புயல் பாதிப்புகளை பார்வையிட குமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வந்த மத்திய ஆய்வுக் குழுவிடம்,  சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் பி. ஜஸ்டின் ஆன்றணி அளித்த மனு: ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மக்கள் நலன் கருதி அந்த சட்டத்தில் போதிய திருத்தங்களை கொண்டு வந்து,  ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
தூத்தூர் மண்டலத்தில் பொருத்தமான இடத்தை தேர்வு செய்து, தேசிய பேரிடர் மீட்பு மைய கிளை அலுவலகம், கடலோர பேரிடர் மீட்பு மைய கிளை மற்றும் வானிலை ஆய்வு மைய கிளை ஆகியவற்றை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.