புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜீப் மோதி அரசுப் பேருந்து நடத்துநர் சாவு

புதுக்கடை அருகே உள்ள மூன்றுமுக்கு பகுதியில் ஜீப் மோதியதில் பலத்த காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநர் இறந்தார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:01 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள மூன்றுமுக்கு பகுதியில் ஜீப் மோதியதில் பலத்த காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநர் இறந்தார்.
புதுக்கடை பனவிளை பகுதியைச் சேர்ந்த செல்லநாடார் மகன் ரவிச்சந்திரன் (54). இவர் குழித்துறை பணிமனையில் அரசுப் பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்தார். இவர், வியாழக்கிழமை புதுக்கடையிலிருந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்றுமுக்கு பகுதியில் எதிரே வந்த ஜீப் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த புதுக்கடை போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.