நாகர்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

குமரி மாவட்ட கவிதை உறவு அமைப்பின் சார்பில், அமைப்பின் ஆண்டு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

குமரி மாவட்ட கவிதை உறவு அமைப்பின் சார்பில், அமைப்பின் ஆண்டு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  இதில், பேராசிரியர் இரா.மோகனின் பன்முக நோக்கில் புறநானூறு,  பேராசிரியர் கா.ஆபத்துகாத்தபிள்ளையின் தமிழர் பண்பாட்டுக் கூறுகள்,  ஏர்வாடியாரின் கொஞ்சம் கனவு, கொஞ்சம் கவிதை ஆகிய  நூல்களை  சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தொழிலதிபர் அறுபது சுப்பையா, மருத்துவர் தாணப்பன்,  பாரத ஸ்டேட் வங்கி உதவி பொதுமேலாளர் மு. அருணகிரி ஆகியோர் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
தமிழறிஞர்கள் உ.வே.சா. விருதுபெற்ற வேலூர் ம.நாராயணன், வை.சுப்பிரமணியன், கீழப்பாவூர் சண்முகையா ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.  நெல்லை கவிநேசன்,  வானதி ராமநாதன்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறந்த கவிதை நூலாக தேர்வு செய்யப்பட்ட பரம்பொருள் ரகசியம் நூலாசிரியர் மற்றும் வை.மாதவன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.  கவிதை உறவு அமைப்பாளர் கு.சிதம்பரநடராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com