சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாகர்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

குமரி மாவட்ட கவிதை உறவு அமைப்பின் சார்பில், அமைப்பின் ஆண்டு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:35 am

DIN

குமரி மாவட்ட கவிதை உறவு அமைப்பின் சார்பில், அமைப்பின் ஆண்டு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  இதில், பேராசிரியர் இரா.மோகனின் பன்முக நோக்கில் புறநானூறு,  பேராசிரியர் கா.ஆபத்துகாத்தபிள்ளையின் தமிழர் பண்பாட்டுக் கூறுகள்,  ஏர்வாடியாரின் கொஞ்சம் கனவு, கொஞ்சம் கவிதை ஆகிய  நூல்களை  சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தொழிலதிபர் அறுபது சுப்பையா, மருத்துவர் தாணப்பன்,  பாரத ஸ்டேட் வங்கி உதவி பொதுமேலாளர் மு. அருணகிரி ஆகியோர் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
தமிழறிஞர்கள் உ.வே.சா. விருதுபெற்ற வேலூர் ம.நாராயணன், வை.சுப்பிரமணியன், கீழப்பாவூர் சண்முகையா ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.  நெல்லை கவிநேசன்,  வானதி ராமநாதன்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறந்த கவிதை நூலாக தேர்வு செய்யப்பட்ட பரம்பொருள் ரகசியம் நூலாசிரியர் மற்றும் வை.மாதவன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.  கவிதை உறவு அமைப்பாளர் கு.சிதம்பரநடராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.