விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தக்கலை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

தக்கலை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:10 pm

DIN

தக்கலை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே மேல்பாறையைச் சேர்ந்தவர் சைமன், (32).   இவர் வெள்ளிக்கிழமை  காலை தேங்காய்பட்டினத்திலிருந்து  கன்னியாகுமரி செல்லும்  அரசுப் பேருந்தை ஓட்டி வந்தார். தக்கலையை அடுத்த பூக்கடை பகுதியில் பேருந்து வந்தபோது, பைக்கில் வந்த 2 இளைஞர்கள் பேருந்தின் ஓட்டுநரை   திட்டி தகராறு செய்தனராம்.  பேருந்தில் அதிக பயணிகள் கூட்டம் இருந்ததால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றாராம்.
இந்நிலையில், திருவிதாங்கோடு அமராவதிகுளம் வரை, சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுவில் இளைஞர்கள் 2 பேரும் பேருந்து மீது கல்லை வீசினராம் .  இதில்  கல் பேருந்தின் பக்கவாட்டில் பட்டதால், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து ஓட்டுநர் சைமன், பேருந்தை  தக்கலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினார். அங்கிருந்து மாற்று பேருந்தில் பயணிகள் அனுப்பப்பட்டனர்.
இது குறித்து சைமன் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.