குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக சுருளகோட்டில் 43 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமரியில் மலையோரப் பகுதிகளிலும், அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிமை காலை 8 மணிக்கு எடுக்கப்பட்ட அளவீட்டின் படி, அதிகபட்சமாக சுருளகோட்டில் 43 மி.மீ., பேச்சிப்பாறையில் 28 மி.மீ., பெருஞ்சாணியில் 15.4 மி.மீ., சிற்றாறு 2இல் 17.2 மி.மீ., அடையாமடையில் 14 மி.மீ., நாகர்கோவிலில் 5.8 மி.மீ., முள்ளங்கினாவிளையில் 4 மி.மீ., கொட்டாரத்தில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
பேச்சிப்பாறை அணைக்கு தற்போது விநாடிக்கு 60 கன அடி நீர்வரத்து உள்ளது. இந்தத் தண்ணீர் அப்படியே பாசனக் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 24 கன அடி நீர்வரத்து உள்ளது. இதர அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பேச்சிப்பாறை அணை தவிர இதர அணைகளின் மதகுகள் மூடப்பட்ட நிலையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாட்டை சிதறடிக்கும்: மம்தா பானா்ஜி எச்சரிக்கை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

