தோவாளையில் பாடநூல் ஏற்றி வந்த லாரியின் டயர் பள்ளத்தில் பதிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பாட புத்தகங்கள், சிவகாசியில் இருந்து லாரிகள் மூலம் பள்ளிக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.
இதில், ஒரு லாரி நாகர்கோவில்- தோவாளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பள்ளி வளாகத்திற்குள் செல்ல முற்பட்ட போது அதன் டயர்கள் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையோர பள்ளத்தில் பதிந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இத்தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், மீட்பு வாகனம் உதவியுடன் லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். சம்பவம் நிகழ்ந்தது பள்ளி, அலுவலகங்களுக்குச் செல்லும் நேரம் என்பதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








