எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கதுவா சம்பவம்: நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் அஞ்சலி

கதுவா, குஜராத் மாநிலம் சூரத் உள்ளிட்ட இடங்களில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகளுக்கு, நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:03 am IST

கதுவா, குஜராத் மாநிலம் சூரத் உள்ளிட்ட இடங்களில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகளுக்கு, நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அதன் துணை பொதுமேலாளர் உஷா தலைமை வகித்தார்.  பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைச் செயலர் பி.இந்திரா அஞ்சலி உரையாற்றினார்.  சங்க நிர்வாகிகள் பி.ராஜூ, ஜார்ஜ், ஆறுமுகம், சின்னத்துரை  உள்பட பலர் கலந்துகொண்டனர். 

களியக்காவிளையில்...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி திமுக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் களியக்காவிளை சந்திப்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட திமுக செயலர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட நிர்வாகி எஸ்.ஆர். சினி உள்ளிட்டோர் பேசினர். திமுக நிர்வாகி ஷாஜகான், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுச் செயலர் மேக்கோடு சலீம், களியக்காவிளை வர்த்தக சங்கத் தலைவர் கிங்ஸ்லி மற்றும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.