
கொட்டாரத்தில் செயல்படாத ஆவின் பாலகம் அகற்றம்
கொட்டாரம் சந்திப்பில் நீண்டகாலமாக செயல்படாமலும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் இருந்த ஆவின் பாலகம் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.
கொட்டாரம் சந்திப்பில் நீண்டகாலமாக செயல்படாமலும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் இருந்த ஆவின் பாலகம் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.
கொட்டாரத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத நிலையிலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் இருந்த ஆவின் பாலகத்தை அகற்ற வேண்டுமென அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வியாழக்கிழமை ஆவின் பாலகம் அகற்றப்பட்டது.
அப்போது, அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.பி.ராஜஜெகன், வட்டாரப் பொருளாளர் ஜார்ஜ், கொட்டாரம் நகரத் தலைவர் அரிகிருஷ்ணபெருமாள் உள்ளிட்டோர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





