8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பேச்சிப்பாறையில் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு

பிரதான அணையான பேச்சிப்பாறை அணையிலிருந்து வியாழக்கிழமை மாலையில் விநாடிக்கு 9700 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. 

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பிரதான அணையான பேச்சிப்பாறை அணையிலிருந்து வியாழக்கிழமை மாலையில் விநாடிக்கு 9700 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. 
தொடர் மழை காரணமாக பெருஞ்சாணி  மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து  புதன்கிழமை காலையில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆறுகளின் கரைப்பகுதிகளான திருவட்டாறு,  திக்குறிச்சி,  குழித்துறை, மங்காடு, முன்சிறை,  வைக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும், விளை நிலங்களிலும் வெள்ளம் புகுந்து ஏராளான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
பேச்சிப்பாறை அணையில் சீரமைப்புப் பணி காரணமாக, அதிகளவில் தண்ணீர் தேக்கப்படாத நிலையில்,  புதன்கிழமை காலையில் அணையிலிருந்து மறுகால் மதகுகள் வழியாக  விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது. 
இதனால் அணையில் கட்டுமானப் பணிகள் நடத்தப்பட்டு வரும் தற்காலிக மண் திடல்கள் மற்றும் சாலைகளை உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறியது. அணையின் முன்பக்கம் சாய்வு அணை கட்டப்படுவதற்கு  தோண்டப்பட்டுள்ள அஸ்திவாரப்பகுதிகளையும் வெள்ளம் மூழ்கடித்தது.   இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் அணையிலிருந்து விநாடிக்கு 8300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மாலையில் 9700 கன அடியாக உயர்த்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்திருந்தது. 
அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் கோதையாற்றில் வெள்ளம் அதிகரித்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை மழையின் தாக்கம் சற்று குறைவாக இருந்ததால், பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு  3 ஆயிரம் கன அடியும்,  சிற்றாறு அணைகளிலிருந்து விநாடிக்கு 636 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 
இந்த அணைகளிலிருந்து வெளியேறும் வெள்ளத்தின் அளவு குறைந்திருந்த போதும், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேறும் வெள்ளம் அதிகரித்துள்ளதால், கோதையாறு மற்றும் தாமிரவருணியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. மேலும், வீடுகள் மற்றும் விளை நிலங்களில் தேங்கிய வெள்ளம் வடியாமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.