பளுகல் அருகே நாகர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பளுகல் அருகேயுள்ள இடைக்கோடு பகுதியில் நாகராஜா காவு ஒன்று உள்ளது. இங்கு இரண்டரை அடி உயரத்தில் நாகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பக்தர்கள் அங்கு சென்றபோது, அங்கிருந்த நாகர் சிலைகளில் ஒன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகி சுரேஷ், பளுகல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







