நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி சாவு

நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
நாகர்கோவில் மேலபுத்தேரியைச் சேர்ந்த  வேலாண்டி மனைவி முத்துலட்சுமி(70). இவர் கடந்த சிலநாள்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் வழக்குப் பதிந்து, பைக் ஓட்டிவந்த  திட்டுவிளையைச் சேர்ந்த ரமீனை கைது செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com