நாகர்கோவிலில் வியாழக்கிழமை(பிப்.22) இலவச எலும்பு உறுதித் தன்மை கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.
நாகர்கோவில் ராமவர்மபுரம் கோபாலபிள்ளை மருத்துவமனையில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இம் முகாமில் மருத்துவர் சி. வேல்முருகன் , எலும்பின் கனிம சத்து கண்டறியும் பரிசோதனை செய்கிறார். இதில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் நீண்ட நாள் எலும்பு மற்றும் மூட்டுவலி நோய் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.