கன்னியாகுமரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கன்னியாகுமரியை அடுத்த மாதவபுரத்தைச் சேர்ந்தவர் தங்கமணி (64). கடை வியாபாரியான இவர், தற்போது கொட்டாரத்தை அடுத்த பெரியவிளையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் மாதவபுரத்தில் உள்ள கோயில் நிகழ்ச்சிக்காக பெரியவிளையில் இருந்து தங்கமணியும் அவரது மகன் செந்தில்மணியும் பைக்கில் வந்தனராம்.
லீபுரத்தை அடுத்த ஆரோக்கியபுரம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பின்னர் வந்த கார் பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தங்கமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். செந்தில்மணி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

இறைச்சிக்காக வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட மருந்துகள்: அறிக்கை கோருகிறது மத்திய அமைப்பு

நீா்வாழ் உயிரினங்கள், முட்டை, தேன் ஏற்றுமதி: இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்
ராணிப்பேட்டையில் ரூ.217 கோடியில் தோல் தொழில்முனையம்: மத்திய அரசு அறிவிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


