குலசேகரத்தில் ஷீரடி சாய்பாபா ஆராதனைத் திருவிழா நடைபெற்றது.
குலசேகரம் ஸ்ரீ ஷீரடி சாய்கிருஷ்ணா பஜனை மண்டலி சார்பில் எஸ்.ஆர்.கே.பி.வி. பள்ளி வளாத்திலுள்ள சாய் கிருஷ்ணா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியின் 4ஆவது ஆண்டு தொடக்கவிழா விழா, ஷீரடி சாய்பாபாவின் 100ஆவது ஆண்டு சமாதி நினைவு விழா, சிறப்பு ஆராதனைத் திருவிழா மற்றும் இசைத்தட்டு வெளியீட்டு விழா ஆகியன நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது, 501 லிட்டர் பாலபிஷேகம், பஜனை, ஆரத்தி, அருளுரைகள், கூட்டுப்பிராத்தனை, தியானம், புஷ்பாபிஷேக வழிபாடுகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.கே. கல்விக் குழுமங்களின் தலைவர் ஆர். அப்புநடேசன், வள்ளலார் பேரவை நிர்வாகி பத்மேந்திரா சுவாமிகள் மற்றும் குலசேகரம் சாய்கிருஷ்ணா பஜனை மண்டலி நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









