காமராஜர் பவுண்டேசன் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சாமிதோப்பில் நடைபெற்றது.
விழாவுக்கு, அமைப்பின் தேசியத் துணைத் தலைவர் பால ஜனாதிபதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் கே.ஜான்குமார், செயலர் எல்.நோயல்ராஜ், பொருளாளர் பிரபாகரன், மாநிலத் தலைவர் எஸ்.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசியத் தலைவர் ஏ.நீலலோகிததாஸ் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். இதில், மதிமுக மாவட்டச் செயலர் வெற்றிவேல், அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி கல்விக் கழகச் செயலர் சி.ராஜன், மதச் சார்பற்ற ஜனதாதளம் மாவட்டத் தலைவர் டி.அருள்ராஜ், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் கதிரேசன், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலர் டி.அரிகிருஷ்ணபெருமாள், மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஆர்.எஸ்.ராஜன், சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவர் யு.தியாகராஜன், சமூக ஆர்வலர் பி.பி.கே.சிந்துகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலை: ஜி.கே.வாசன்
ஆட்டோ கட்டணத்தை உயா்த்த தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வா் விஜய் அறிவிப்பு





