தோவாளை பண்டாரபுரம் மைலாடி விலக்கில் உள்ள பாலத்தில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிபாரதி (25). இவர், நண்பர் தர்மபுரத்தைச் சேர்ந்த பிரபாகரனுடன், தனது பைக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நாகர்கோவிலிலிருந்து - ஆரல்வாய்மொழி குமாரபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாராம். அப்போது பைக் மைலாடிவிலக்கில் உள்ள புதிய பாலத்தில் நிலை தடுமாறி மோதியதில் பலத்த காயமடைந்த மணிபாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!

இபிஎஸ் பற்றி பேச பல கட்சிகளுக்குச் சென்று வந்த ஆதவ் அர்ஜுனாவுக்குத் தகுதி இல்லை: கே.பி. முனுசாமி
தேர்தல் தோல்வி! சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸ் மீது தாக்குதல் ஏன்? மாணிக்கம் தாகூர்

இன்றைய செய்திகள் ஜூன் 6 - நேரலை!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


