நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில், அதன் தலைவர் ஸ்ரீராம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு இம்மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் நாள்தோறும் செல்கின்றனர். இங்கிருந்து நேரடி ரயில் வசதி இல்லாததால், ஏதாவது ஒரு ரயிலில் திருச்சி சென்று, அங்கிருந்து நாகப்பட்டினம் செல்லும் ரயிலில் செல்கின்றனர். இதனால் ஏற்படும் அவதியை தவிர்க்க பேருந்துகளிலும், தனியாக வாடகைக்கு வேன்கள் பிடித்தும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.
இக்கோயில் ஆண்டு திருவிழா ஆக. 29ஆம் தேதி தொடங்கி செப். 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு திருவனந்தபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிகமான பக்தர்கள் செல்வர்.
எனவே, திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவித்து, இரு மார்க்கங்களிலும் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும்படியாக காலஅட்டவணை அமைத்து, நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, வள்ளியூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லதக்க வகையில் இயக்க வேண்டும்.
மேலும், சிறப்பு ரயில்களை கடைசி நேரத்தில் அறிவிக்காமல், குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து நொறுங்கிய பாக். ராணுவ ஹெலிகாப்டர்! பயணிகள் அனைவரும் பலி!

டெஸ்ட் அணியின் கேப்டனாகிறாரா சல்மான் அலி அகா?

ராகுல், சோனியாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.95.27! 14 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


