திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கேரள பேருந்து மோதி நினைவு ஸ்தூபி சேதம்

களியக்காவிளை அருகே தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசு சின்னம் பொறித்த நினைவு தூண் மீது கேரள அரசுப் பேருந்து மோதியதில், தூண் முற்றிலும் சேதமடைந்தது.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:06 am

DIN

களியக்காவிளை அருகே தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசு சின்னம் பொறித்த நினைவு தூண் மீது கேரள அரசுப் பேருந்து மோதியதில், தூண் முற்றிலும் சேதமடைந்தது.
தமிழக,  கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளையில் தேசிய நெடுஞ்சாலையோரம் தமிழக அரசின் சின்னம் பொறித்த நினைவு தூணும், சாலையின் மறுபகுதியில் நான்கு சிங்கங்களின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவு தூணும் அமைக்கப்பட்டுள்ளது.  
இந்நிலையில் புதன்கிழமை மாலை திருவனந்தபுரத்திலிருந்து களியக்காவிளைக்கு கேரள அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தபோது,  நெடுங்கோடு பகுதியிலிருந்து இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக முக்கிய சாலைக்கு வந்தார்.  இதைக் கவனித்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் லேசாக திருப்பினாராம்.  இதில்,  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து அப்பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கேரள அரசின் மின்கம்பம் மீது மோதியது.  இதில் 2 மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததுடன்,  அருகில் உள்ள தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட  நினைவு தூணும்  உடைந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.
ஆகவே,  பேருந்து மோதி சேதமடைந்த அரசு சின்னம் பொறிக்கப்பட்ட நினைவு தூணை அப்பகுதியில் விரைந்து அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.